|
|
(கள்ளக்
காதலர் தினம் இலங்கை. காத்தகுடி. ஏ.எஸ்.எம். மக்பூல்
இன்றைய உலகம் பல முன்னேற்றங்களையும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினையும் அடைந்துள்ளது. குறிப்பாக அச்சு, இலத்திரனிய ஊடகங்களில் அபிவிருத்தி ஏராளமான மாற்றங்களையும் தாக்கங்ளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊடகங்களின் விரிவாக்கத்தால் நன்மையையும், பயனையும் அடையும் நாம் சீரழிவுகளையும் மற்றும் மனிதநேயம், மனிதாபிமானத்தையும் தொலைத்து நாகரீகம் என்ற வார்த்தையில் அநாகரிகமாய் அடைய விட்டு வைத்து இருப்பதை நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்கிறோம்.
தவறான வாழ்க்கை முறையிலிருந்து கௌரமான மதிக்கத்தக்க ஒரு சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாட்டுடனும் கடமையுடனும் இருக்கிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் சீர்படுத்த வேண்டிய சீரமைக்க வேண்டிய முக்கியமான ஒன்று நாம் இளைய சமுதாயம். ஆம்.. இன்றைய இளையவயதினர் குறிப்பாக மாணாக்கர்கள் அறிவுபூர்வமாய் ஆக்கப்பூர்வமாய் செயல்படாமல் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் தீய விளம்பரங்களுக்கும் அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
இதற்கு உதாரணமாய் ஏராளமான விஷயங்களை நாம் காணலாம். அதில் பிப்ரவரி 14 காதலர்களின் களியாட்ட கொண்டாட தினமான காதலர்கள் தினத்தினை (Valentine’s Day) கூறலாம்.
எந்த காதலரும் மறக்காத மற்றும் மறக்க முடியாத காத்து காத்து தவம் கிடக்கும் தினமாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நமக்கு ஜனவரி என்றால் புதுவருடம் பிறப்பது சர்வ சாதாரணம். ஆனால் காதலர்களோ இன்னும் 45 நாள்கள் தான்.. காதலர்கள் தினம் நெருங்கி விட்டது. இனி களத்தில் இறங்க வேண்டியது தான் என்று கொண்டாடத்திற்கான ஆயத்தங்களிலும் கற்பனைகளிலும் திட்டம் தீட்டுவதிலும் மூழ்கி விடுவார்கள்.
இந்த நேரமாக பார்த்து கையிலும் காசு இல்லை பரிசுப்பொருட்கள் புதிய ஆடைகள் பார்ட்டிக்கென்றும் இன்னும் எவ்வளவு தேவைகள் இருக்கிறது என்று அங்கலாய்த்து கொள்வார்கள்.
Categories: Islamic Essays
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.